காரத் தொழுவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது

2242பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே காரத் தொழுவு அழகுநாச்சி அம்மன் கோவில் அருகே அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களை தாக்கிய வாலிபர்கள் சிலரை கைது செய்ய வலியுறுத்தி, பெண்கள் குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து மடத்துக்குளம் காவல் ஆய்வாளர் பாலமுருகன் பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி