பழையகோட்டையில் ரூ. 8 லட்சத்துக்கு காங்கேயம் மாடுகள் விற்பனை

85பார்த்தது
காங்கேயம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை மாட்டுத் தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும்,  கம்பீரத்துக்கும் உலகப் புகழ் பெற்ற காங்கேயம்  இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை நடைபெறும். சந்தையில் நேற்று 68 மாடுகளில், மொத்தம் 20 விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

இதன்படி சந்தையில் அதிகபட்சமாக காங்கயம் இன கிடாரி கன்றுடன் மயிலை பசுமாடு ரூ. 57 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ. 42 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ. 8 லட்சத்திற்கு காங்கேயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 6 வருட காலமாகவே பழையகோட்டை மாட்டுத்தாவணி சந்தையில் ரேக்ளா, ஜல்லிக்கட்டு. மஞ்சு விரட்டு போட்டிகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தரும் பால் உற்பத்திக்காகவும், விவசாயிகள் வளர்க்கும் ஆர்வம் காரணமாகவும் வழக்கத்தை விட பசுமாடுகள்,  இளங்கன்றுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, திருச்சி, கரூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள், மாடுகள் வளர்க்கும் விவசாயிகள், வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி