முர்ஷிதாபாத், ஜாங்கிபுர் மக்களவை தொகுதிகளில் இன்று மம்தா பானர்ஜி நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்த கொண்டார். அப்போது பேசிய அவர், “தேர்தல் வரும்போது மட்டும் பாஜகவினர் ஒரு பதற்றத்தை ஏற்படுத்துவார்கள். இந்த முறை அவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக பொது சிவில் சட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். அதனை வைத்து தற்போது பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தலில் சொல்வதைத் தவிர அதில் வேறு எந்த பயனும் இல்லை. இதனால் இந்துக்கள் எந்த வகையிலும் பயனடைய மாட்டார்கள்” என கூறியுள்ளார்.