காங்கேயத்தில் தேங்காய் பருப்புகள் ரூ 1. 50 லட்சத்திற்கு‌ ஏலம்

53பார்த்தது
காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புகள் ரூ. 1. 50 லட்சத்திற்கு‌ ஏலம்


காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கயம் மற்றும் வெள்ளகோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயி ஒருவர் 1730 கிலோ எடையுள்ள 31 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். காங்கயம் சுற்றுவட்டார பகுதியான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 4 வியாபாரிகள் இந்த மூட்டைகளை ஏலத்தில் கலந்து கொண்டு ஏலம் எடுத்தனர். குறைந்தபட்ச விலையாக ரூ. 78. 90க்கும் அதிகபட்சமாக ரூ. 90. 69க்கும் ஏலம் எடுக்கப்பட்டது. 1730 கிலோ எடையுள்ள 31 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஒரு‌ லட்சத்து 50 ஆயிரத்து 785 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இத்தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி