குண்டடம்: மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி!

81பார்த்தது
குண்டடம்: மாடுகள் வரத்து அதிகரிப்பால் விலை கடும் வீழ்ச்சி!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் வார சந்தையில் நடைபெற்ற சந்தைக்கு குண்டடம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அதிக அளவில் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மாடுகளின் வரத்து அதிகமானதால் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. 45, 000 ரூபாய்க்கு விற்பனையான கரவை மாடுகள் இந்த வாரம் 35 ஆயிரம் வரை விற்பனையானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். குண்டடம் பகுதியில் தற்போது வறட்சி மற்றும் கடுமையான வெயில் நிலவி வருவதால் தீவனத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் கரவை மாடு வளர்க்கும் விவசாயிகள் அதிக அளவு குண்டடம் வார சந்தைக்கு கறவை மாடுகளை கொண்டு வந்ததால் விலை குறைந்ததாக மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி