சவுக்கு சங்கரை தாக்கிய பெண் காவலர்கள்?

62பார்த்தது
சவுக்கு சங்கரை தாக்கிய பெண் காவலர்கள்?
பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (மே.15) திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சுற்றியும் 50க்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கையில் மாவுக்கட்டுடன் சவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்டார். நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவர், பெண் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்ததாக புகார் தெரிவித்தார். அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை மருத்துவர்கள் சோதனை செய்ய திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி