திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வீராச்சிமங்கலம் பகுதியில் பழனிக்கு பாதயத்திரை செல்வதற்காக பக்தர்கள் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். முருகானந்தம் என்ற பக்தருக்கும் பாரதிராஜா என்ற பக்தருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் முருகானந்தம் பாரதிராஜாவை கத்தியால் குத்தினார். பொதுமக்கள் முருகானந்தத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் இந்த நிலையில் போலீசார் இரு தரப்பினரையும் விசாரணை நடத்தினர்.