டாஸ்மார்க் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு

73பார்த்தது
திருப்பூர் மாவட்டம் வேங்கை பாளையம் அடுத்த சூரியநல்லூர் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள பைபாஸ் ரோட்டில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க டாஸ்மார்க் நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக புதிதாக கடை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் டாஸ்மார்க் கடை அமையும் பட்சத்தில் ஏராளமான விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவே இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதிக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் பொதுமக்கள் மற்றும் போராட்டக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் பொதுமக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி