சென்னை அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் ‘யார் அந்த சார்? ' என்ற அ. தி. மு. க. வின் கேள்விக்கு விடை தெரியாத நிலையில், தற்போது டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அ. தி. மு. க. வினரால் திருச்சியில் நள்ளிரவில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் ரெயில் நிலைய பகுதி, மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம், தில்லைநகர், கே. கே. நகர், பாலக்கரை உள்பட பல பகுதிகளில் சுவர்களில் அ. தி. மு. க. சார்பில் டாஸ்மாக் ஊழல் என்ற தலைப்பில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுவரொட்டிகள் ஒட்டப் பட்டு இருந்தன. அதில் 'பாட்டிலுக்கு 10 ரூபாய், விற்பனையில் ரூ. 1, 000 கோடி, உரிமம் பெறாத பார்கள் மூலம் ரூ. 40 ஆயிரம் கோடி, ரூ. 1, 000 கொடுப்பது போல கொடுத்து ரூ. 1, 000 கோடியை அமுக்கிய அந்த தியாகி யார்? என குறிப்பிட்டு அ. தி. மு. க. திருச்சி மாநகர் மாவட்ட கழ கம் என்ற வாசகங்களுடன் இடம்பெற்று இருந்தன. மாநகரின் பல பகு திகளில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட் டது. இதுபற்றி அறிந்த போலீசார் நேற்று அந்த சுவரொட்டிகளை கிழித்தனர்.