கற்பக விருட்ச வாகனத்தில் வலம் வந்த நம்பெருமாள்.

70பார்த்தது
ஸ்ரீரங்கம் கோயிலில் விருப்பன் திருநாள் எனும் சித்திரைத் தேரோட்டம் மே 6-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நடும் விழா சித்திரை தேரில் நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரத்தில் மாலை 6. 30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகள் உலா வந்து இரவு 8. 30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார்.

இந்நிலையில் சித்திரைத் தேரோட்ட விழாவின் 2 ஆம் நாளான திங்கள்கிழமை மாலை கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வந்த நம்பெருமாள் பக்தா்களுக்கு சேவை சாதித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது

தொடர்புடைய செய்தி