திருச்சி பிஎச்இஎல் டவுன்ஷிப் கைலாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாலதி இவர் தனது இரு சக்கர வாகனத்தில் பிஎச்எல் டவுன்ஷிப் பகுதியில் உள்ள அமுதம் அங்காடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த ஆட்டோ இவருடைய இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த மாலதிக்கு தலை மற்றும் வலது கை பகுதியில் காயம் ஏற்பட்டு பி ஹெச் இ எல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுறான திருவரம்பூர் எழில் நகர் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் பாஷா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து பிஹெச்இஎல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.