கொப்பம்பட்டியில் 5 மில்லி மீட்டர் மழை பதிவு

85பார்த்தது
துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டியில் நேற்று 5 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொப்பம்பட்டி மற்றும் துறையூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று சுமார் அரை மணி நேரம் சாரல் மழை பொழிந்தது இதில் கொப்பம்பட்டியில் ஐந்து மில்லி மீட்டர் பச்சைமலை தென்புறநாடு பகுதியில் இரண்டு மில்லி மீட்டரும் துறையூர் பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி