திருவரம்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா இவருடைய 17 வயது மகள் துவாக்குடி பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு பிபிஏ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காதால் அவருடைய தாய் ஆசா திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கல்லூரி மாணவி காணாமல் போன சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.