சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் “பெல்ட் ஏரியாக்கலிள்” உள்ள புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் 29,187 பேர், மற்றும் மதுரை, நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்குப் பட்டா வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். 6 மாதங்களில் இதனை சித்து முடிக்கவும், இதுவரை 12,29,372 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.