உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஹை ஹீல்ஸ் காலணி அணிந்ததால் ஏற்பட்ட தகராறில் புதுமண தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் காரணமாக தம்பதியினர் விவாகரத்து வரை சென்றுள்ளனர். தொடக்கத்தில் மனைவியின் விருப்பப்படி ஹை ஹில்ஸ் காலணிகளை கணவர் வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை அணிந்த மனைவி, கீழே விழுந்து காயமடைந்த பிறகு அதனை வாங்கித் தர கணவர் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்நபரின் மனைவி கோபித்துக்கொண்டு தாயார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.