கல்லூரி பஸ், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

6668பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே நெடுந்தெரு என்ற பகுதியில் தஞ்சையில் இருந்து சுமார் 15 மாணவர்களை ஏற்றி வந்த ப்ரீஸ்ட் யுனிவர்சிட்டியை சேர்ந்த தனியார் கல்லூரி பேருந்தும், கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் காய்கறிகளை இறக்கிவிட்டு பாபநாசம் வழியாக திரும்பிக் கொண்டிருந்த பொள்ளாச்சியை சேர்ந்த லாரியும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காயமடைந்த கல்லூரி வாகனத்தில் வந்த 4 பேரும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த பொள்ளாச்சி கோட்டூர் அருகே உள்ள பழனியூரைச் சேர்ந்த லாரி டிரைவர் திருமூர்த்தி பொதுமக்கள் உதவியுடன் மீட்டு, தஞ்சையில் அமைந்துள்ள காமாட்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  

விபத்து காரணமாக தஞ்சாவூர் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாபநாசம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், அய்யம்பேட்டை போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி