கஞ்சாவுடன் முதல்வரை பார்க்க வந்த பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு

61பார்த்தது
கஞ்சாவுடன் முதல்வரை பார்க்க வந்த பாஜக நிர்வாகி சிறையிலடைப்பு
முதல்வர் ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதற்காக நேற்று தனிவிமானம் மூலம் மதுரை வந்தார். அவரிடம் தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டதை சுட்டி காட்டும் வகையில் கையில் கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்த பாஜக ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டியனை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர் மீது 294 b, 353, 506(ii) உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி