மே தினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

79பார்த்தது
மே தினம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உழைக்கும் தொழிலாளர் குடும்பங்கள் கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலை பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “ மே தின” வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், தொழிலாளர் சமுதாயம் 8 மணி நேர வேலை, முறையான ஊதியம் ஆகியவற்றை வலியுறுத்தி இரத்தம் சிந்தி போராடி, உயிர்ப்பலி தந்து தொழிலாளர் சமுதாயம் பெற்ற உரிமை வரலாற்றை நினைவுபடுத்தும் நாள் தான் மே நாள். திமுக தொழிலாளர்களை உயிராக மதிக்கும் இயக்கம்.

தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர்களின் நலம்நாடிப் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர் நலனில் முழு அக்கறை செலுத்தி தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் காத்து வரும் திராவிட மாடல் அரசின் சார்பில் மே தின வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி