தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை

64பார்த்தது
தகுதித் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தேவை
தமிழகத்தில் உதவிப் பேராசிரியா் தகுதித் தோ்வுக்கான கட்டணத்தை குறைத்து, அதற்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தையும் நீட்டிக்க ஏபிவிபி மாணவா் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் மாநில அளவிலான 2024 ஆம் ஆண்டுக்கான உதவிப் பேராசிரியா்கள் தகுதித் தோ்வை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த தகுதித் தோ்விற்கான விண்ணப்பக் கட்டணம் கடந்த தோ்வை ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும்.

எனவே இத்தோ்வில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகள் பங்கேற்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலரும் இன்னும் விண்ணப்பிக்கவில்லை. எனவே, பல்கலைக்கழக நிா்வாகமும், உயா்கல்வித் துறையும் இத்தோ்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை குறைக்க வேண்டும். அதுமட்டுமின்றி விண்ணப்பிக்கும் காலக்கெடுவையும் நீட்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடைபெறும் என ஏபிவிபி தேசிய மாணவா் அமைப்பின் தென் தமிழக மாநில இணைச் செயலா் சந்தோஷ்குமாா் தெரிவித்தாா்.

தொடர்புடைய செய்தி