பறவைகள் பூங்காவை பார்வையிட்ட அமைச்சர் நேரு

76பார்த்தது
நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என். நேரு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 13. 70 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை இன்று (09. 07. 2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், சிறப்பான முறையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. பிரதீப் குமார் அவர்கள், மாநகராட்;சி ஆணையர் திரு. வே. சரவணன் இ. ஆ. ப. , அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. தேவநாதன், நகரப் பொறியாளர் திரு. சிவபாதம், அந்தநல்லூர் ஒன்றியக்குழு தலைவர் திரு. துரைராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி