நல வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட முறைசாரா தொழிலாளர்கள்

73பார்த்தது
திருச்சி மன்னார்புறத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர்துறை அலுவலகத்தை சுமார் 200க்கும் மேற்பட்ட முறைசாரா தொழிலாளர்கள் முற்றுகையிட்டு கோரிக்கை வலியுறுத்தி சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது அழிந்து போனதாக சொல்லப்படும் 72லட்சம் நல வாரிய உறுப்பினர்களின் தகவல்கள் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும், நல வாரியத்தில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும், பதிவு, புதுப்பித்தல், பென்ஷன் உட்பட பணப் பயன்கள் வழங்குவதில்
ஓராண்டு காலமாக அலட்சியம் காட்டி வருகிறது. எனவே, தமிழக அரசு தலையிட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும், திருச்சி நல வாரியத்தில் 400-க்கும் மேற்பட்ட நபர்கள் போலியான தொழிற்சங்கங்களை சிலர் உருவாக்கி கையெழுத்திடுவதை அரசு உடனடியாக தடுத்து நிறுத்து வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் செல்வி, சந்திரசேகர், சந்திரன், சிவராஜ், மணிகண்டன் உட்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி