திருச்சியில் சிக்னலில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது

558பார்த்தது
திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் போக்குவரத்து சிக்னலில் வெயில் கொடுமையில் இருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது பெரும் வரவேற்பு பெற்றுள்ளது

திருச்சியில் கடந்த சில நாட்களாக தினமும் 100 டிகிரியை தாண்டி வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் உள்ள சிக்னலில் உறையூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் பொழுது அவர்களை வெயில் கொடுமையில் இருந்து பாதுகாக்கும் வகையில் போக்குவரத்து காவலர்கள் ஏற்பாட்டின் பேரில் மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதுபோல் மாநகரில் பல்வேறு இடங்களில் உள்ள சிக்னல்களிலும் மேற்கூரை அமைத்தால் வெயில் கொடுமையில் இருந்து வாகன ஓட்டிகள் தப்பிக்க வழிவகை செய்யும் என தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி