கேரளாவில் வாக்களிக்க வந்த 7 பேர் உயிரிழப்பு

55பார்த்தது
கேரளாவில் வாக்களிக்க வந்த 7 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று(ஏப்.26) கேரளாவில் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு பகுதிகளில் வாக்களிக்க வரிசையில் நின்று இருந்தபோது 7 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். தேர்தல்களை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தாமல் அதற்கு முன்னதாகவோ அல்லது அதன் பிறகு நடத்த வேண்டும் என வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.