ரயில் நிலையத்தில் 1 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

61பார்த்தது
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை மூத்த கோட்ட ஆணையர் டாக்டர் அபிஷேக், உதவி கோட்ட ஆணையர் பிரமோத்நாயர், ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையிலான போலீசார் திருச்சி ரயில்வே சந்திப்பில் வழக்கம் போல் பயணிகள் உடைமைகளை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை சென்னையில் இருந்து திருச்சி வந்த மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த மதுரையை சேர்ந்த லட்சுமணன் (26) என்பவர் மாஸ்க் அணிந்து சற்று வித்தியாசமாக நடந்து வந்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் லட்சுமனணின் பையை சோதனை செய்தனர்.

அதில் 1 கோடியே 89 லட்சத்து 622 ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ 795. 90 கிராம் தங்கம் மற்றும் 500 ரூபாய் கட்டு கட்டுகளாக 15 லட்சம் ரொக்க பணத்தை கைப்பற்றினர்.

தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் ஜங்சன் ரயில் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது‌.

அது போலி ஆவணங்கள் என தெரியவந்ததால் தற்போது லட்சுமணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி