கள்ளக்குறிச்சி: 70 பேர் இறந்த பகுதியில் மீண்டும் கள்ளச்சாராயம்

74பார்த்தது
கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி பகுதிகளில் கடந்த ஜூனில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய மரணங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியது. 70 உயிரை காவு வாங்கிய அந்த கொடூர சம்பவத்திலிருந்து கள்ளக்குறிச்சி முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் அதே இடத்தில் நபர் ஒருவர் கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி