லால்குடி அருகே சாலையில் கொட்டிக் கிடந்த ஆதார் அட்டைகள்

5358பார்த்தது
ஆதார் கார்டு என்பது தற்போது இந்திய குடிமக்களின் மிக முக்கிய ஆவணமாகும். வங்கி கணக்கு, பேன் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட பொதுமக்களின் அத்யாவசிய தேவைக்களுக்கான அட்டைகளில் ஆதாரை இணைப்பது அவசியமாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டைகள் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் கிராமத்தில் ரோட்டில் வீசப்பட்டு கிடந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஆதார் கார்டுகள் பூவாளூரில் உள்ள நிர்மலா என்பவரின் வீட்டின் முன்பாக கொட்டிக்கிடந்தது. ஆதார் கார்டுகளில் உள்ள அனைத்து முகவரியும் பூவாளுரை சேர்ந்ததாக உள்ளது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பொதுமக்களுக்கு தபால் மூலம் வந்த ஆதார் கார்டுகளை சரியாக வீடுகளுக்கு சென்று டெலிவரி செய்யாமல் தபால் ஊழியர் யாரேனும் வீசி சென்றனரா? அல்லது வாகனங்களில் இருந்து தவறி விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி