போதை பொருள் கொடுத்து 8 வயது சிறுமி பலாத்காரம்!

17909பார்த்தது
போதை பொருள் கொடுத்து 8 வயது சிறுமி பலாத்காரம்!
மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிடப் பள்ளி விடுதியில் 8 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய வைத்து பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. தன்னைப் பார்க்க வந்த தாயிடம் இதுகுறித்து சிறுமி கூறியுள்ளார். தாயின் புகாரின் பேரில் வார்டன் மற்றும் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி