"ஒரு எருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளும்" - மோடி

55பார்த்தது
"ஒரு எருமையை காங்கிரஸ் எடுத்துக்கொள்ளும்" - மோடி
மக்களவை தேர்தல் தொடங்கி நாடு முழுவது 7 கட்டங்களாக நடந்து வருகிறது. தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று பிரதமர் மோடி குஜராத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் உங்களிடம் இரண்டு எருமை மாடுகள் இருந்தால் காங்கிரஸ் கட்சி தேர்தலில் ஜெயிக்கும் பட்சத்தில் அவர்கள் ஒரு எருமை மாட்டை எடுத்துக்கொள்வார்கள் என கூறியுள்ளார். முன்னதாக உங்களது சொத்துக்களை காங்கிரஸ் கட்சி எடுத்துக்கொள்ளும் என அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி