சீறிப்பாய்ந்த 65 ஜோடி மாடுகள்!

84பார்த்தது
விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்: சீறிப்பாய்ந்த 65 ஜோடி மாடுகள்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழாவை முன்னிட்டு, மாபெரும் மாட்டுவண்டிகள் எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 65 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. போட்டியானது சிறிய மாடு, 12 கிலோமீட்டர் தூரமும், பூஞ்சிட்டு 8 கிலோமீட்டர் தூரமும் என இரு பிரிவுகளாக போட்டியானது நடைபெற்றது. நாகலாபுரத்தில் முதல்முறையாக மாட்டு வண்டிகள் பந்தயம் நடைபெற்றதால், பந்தயத்தை காண நீண்ட தூரம் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று கண்டு ரசித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் எல்கை பந்தயத்தை விளாத்திகுளம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி