ரூ.1 கோடி வரை இழந்த இளைஞர் தற்கொலை

61பார்த்தது
ரூ.1 கோடி வரை இழந்த இளைஞர் தற்கொலை
ஆன்லைன் ட்ரேடிங்கில் ரூ.1 கோடி வரை இழந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டார். சென்னை பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் எல்ஐசி ஏஜெண்ட் வினோத். இவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் ட்ரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். தொடர் நஷ்டத்தால் கடன் அதிகமாகி மன உளைச்சலில் திடீரென தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி