சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா!

83பார்த்தது
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா!
தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 122 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

முன்னதாக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் தேவர் புரம் ரோட்டில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் படத்திற்கு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து காமராஜ் காய்கனி மார்க்கெட், பழைய மாநகராட்சி அலுவலகம், வ. உ. சி மார்க்கெட் பகுதிகளில் அமைந்துள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்பு பிரையண்ட் நகர் 2வது தெருவில் காமராஜர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கிருந்து துவங்கிய 122 பால்குடம் ஊர்வலத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் லயன் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜோசப் இளைஞரணி செயலாளர் பசும்பொன் முருகன், வர்த்தக அணி செயலாளர் சிவசு, முத்துக்குமார், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் உள்பட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி