பாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்றவர்களுக்கு உதயநிதி வாழ்த்து

81பார்த்தது
பாரா ஒலிம்பிக்: பதக்கம் வென்றவர்களுக்கு உதயநிதி வாழ்த்து
பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகள், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி வெளியிட்ட பதிவில், “வரலாற்றுச் சிறப்புமிக்கப் பதக்கங்களைப் பெற்றுத் தமிழகம் திரும்பிய துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் மற்றும் நித்யா ஸ்ரீ சிவன் ஆகியோரை வாழ்த்தினோம். ஒலிம்பிக்கில் பங்கேற்ற 6 பேரில், 4 பேர் பதக்கங்களுடன் திரும்பியுள்ளதால், இது உண்மையிலேயே தமிழகத்திற்கு பெருமையான தருணம்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி