‘முதல்முறை சிறை செல்வோருக்கு தனி சிறை’ - மதுரை நீதிமன்றம்

76பார்த்தது
‘முதல்முறை சிறை செல்வோருக்கு தனி சிறை’ - மதுரை நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் கோரும் மனுக்களை நீதிபதி பரத சக்கரவர்த்தி இன்று விசாரித்து வந்தார். அப்போது, “சிறிய வழக்குகளில் சிறையில் இருக்கும் இளைஞர்கள், பெரிய குற்றவாளிகளுடன் ஏற்பட்ட தொடர்பில் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். எனவே, குற்றச் செயல்களில் ஈடுபட்டு முதன்முறை சிறைக்குச் செல்வோருக்கு தனியாக சிறைகளை அமைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்புடைய செய்தி