தூத்துக்குடி - Thoothukudi

அமமுக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

அமமுக சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா!

தூத்துக்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 122வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்விக்கண் திறந்த கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் பிரைட்டர் தலைமையில், இன்று தூத்துக்குடி வஉசி மார்க்கெட் முன்பு அமைந்துள்ள பெருந்தலைவரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மகளிரணி துணைச்செயலாளர் சண்முககுமாரி, அவைத் தலைவர் தங்க மாரியப்பன், மாவட்ட கழக துணைச் செயலாளர் முனியசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமேஸ்வரி (தூத்துக்குடி), மாவட்ட அம்மா பேரவை தலைவர் குமார், மாவட்ட மாணவரணி தலைவர் அசோக்குமார், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் வீரபுத்திரன் மாவட்ட தொழிற்நுட்பப் பிரிவு செயலாளர் (ஆண்கள்) ஸ்ரீவை சிவா, மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை பொருளாளர் சக்திவேல் மாவட்ட இதய தெய்வம் அம்மா பேரவை துணைச்செயலாளர் பரமசிவம் மாவட்ட இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை இணைச் செயலாளர் அகஸ்டின் பகுதி செயலாளர்கள் சின்னசாமி, தாவீது, ஜான் பெர்னாண்டோ, முத்துச்செல்வம், மதன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வீடியோஸ்


தூத்துக்குடி
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த MLA!
Jul 15, 2024, 14:07 IST/விளாத்திகுளம்
விளாத்திகுளம்

முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த MLA!

Jul 15, 2024, 14:07 IST
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் கரிசல்குளம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு உணவுகளை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார். மேலும் மறைந்த முன்னாள் முதல்வர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.