எதிர்பாராத விபத்து.. தமிழக ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலி

74பார்த்தது
எதிர்பாராத விபத்து.. தமிழக ராணுவ வீரர் உள்பட 4 பேர் பலி
மேற்கு வங்காள பெடோங்கில் இருந்து சிக்கிமில் உள்ள ஜூலுக் நோக்கி இந்திய ராணுவ வீரர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வாகன விபத்தில் நான்கு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரதீப் படேல், மணிப்பூரைச் சேர்ந்த பீட்டர், ஹரியானாவைச் சேர்ந்த நாயக் குர்சேவ் சிங் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபேதார் கே தங்கபாண்டி ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.