பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு

85பார்த்தது
பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உத்தரவின்படி சாத்தான்குளம், புதுக்கோட்டை, கோவில்பட்டி ஆகிய 3 அனைத்து மகளிர் காவல் நிலையம் மற்றும் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அதன்படி சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பாமா பத்மினி தலைமையிலான போலீசார் கச்சனாவிளை புனித மேரி பெண்கள் மேல் நிலை பள்ளியில் மாணவிகளிடமும், புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லதா மற்றும் போலீசார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மறவன்மடம் பகுதியில் பொதுமக்களிடமும், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கமலாதேவி மற்றும் போலீசார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அய்யனேரி பகுதியில் பொதுமக்களிடமும், பசுவந்தனை காவல் நிலைய போலீசார் பசுவந்தனை பகுதியில் போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்தும் ‘மாற்றத்தை தேடி" விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி