குறைதீர்க்கும் முகாமில் தீர்வு: மேயர் ஆணைகளை வழங்கினார்.

54பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் தீர்வு காணப்பட்டவர்களுக்கு ஆணைகளை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த புதன்கிழமை மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு மனு அளித்தது தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆவணங்களை மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி