சாகர் கவாஜ் ஒத்திகை; கடல் வழியாக நுழைய முயன்ற 11பேர் கைது!

52பார்த்தது
தூத்துக்குடி கடல் பகுதியில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் நடைபெறும் சாகர் கவாஜ் ஒத்திகையில் தூத்துக்குடி கடல் பகுதி வழியாக நுழைய முயன்ற 11 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து விசாரணை


மும்பையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர் இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாஜ் கடல் ஒத்திகை நடத்தப்படும்

இந்நிலையில் இன்று காலை 6: 00 மணி முதல் நாளை காலை 6 மணி வரை கடல் பகுதி வழியாக அந்நிய நபர்கள் யாரேனும் ஊடுருவுகிறார்களா என்பது குறித்த ஒத்திகை துவங்கி நடைபெற்று வருகிறது இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் கடல் பகுதியில் பாதுகாப்பு ரோந்து படகு மூலம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் சோதனை செய்ததில் கடல் பகுதி வழியாக ஊடுருவ முயன்ற 11 பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி