கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை கனிமொழி எம்பி நேரில் ஆய்வு!

76பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் வல்லநாடு ஆற்றுப்படுகிலுள்ள சேதுராமலிங்கபுரத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மூலமாக ரூ. 515. 72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி, புதூர் மற்றும் விளாத்திகுளம் ஆகிய ஒன்றியங்களை சேர்ந்த 363 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் பாராளுமன்ற திமுக குழு தலைவரும்
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி இந்த பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்தும் படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.


அதனைத்தொடர்ந்து, கலியாவூர் கிராமத்தில் அமைந்துள்ள மருதூர் அணைக்கட்டை பார்வையிட்ட கனிமொழி எம்பி தொடர்ந்து அங்கிருந்து எந்தெந்த பகுதிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது என்பது குறித்தும் அதிகாரியிடம் கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்தி