கனவு காண்பது அவரது உரிமை: வாசுகி பிரச்சாரத்தில் பேச்சு

82பார்த்தது
தமிழகம் மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போது வராத மோடி இன்று வந்து திருக்குறளை சொன்னால் தமிழக மக்கள் மத்தியில் நான்தான் இடம் பிடித்திருக்கிறேன் என நடந்ததை மறந்து தமிழக மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள் என கனவு கண்டு கொண்டிருக்கிறார் கனவு காண்பது அவரது உரிமை ஆனால் யதார்த்தம் அவர் காண்கிற கனவில் இருந்து நேர்மாறானது என்பதை உணர்த்தக்கூடிய நாள் தான் வருகிற 19ஆம் தேதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேச்சு


தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கருணாநிதி எம் பி யை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் வாசுகி பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பேசும்போது

கடந்த 10 ஆண்டுகளாக மோடி மக்களுக்கு சூப்பு கொடுத்துக் கொண்டிருந்ததாகவும் அடுத்த ஐந்து ஆண்டுகள் அவர் கையில் கொடுத்தால் கறி விருந்து வைப்பதாக சமீபத்தில் பத்திரிக்கையில் பார்த்ததாக பேசிய வாசுகி சிவாஜி பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது ஓடினால் ஓடினாள் வாழ்க்கை எல்லைக்கு ஓடினால் என்ற வசனம் ஞாபகத்துக்கு வருகிறது நாம் மோடி என ஓட முடியாமல் நின்று கொண்டிருக்கிறோம் என்றார்

தொடர்புடைய செய்தி