11 மணி நேரமாக நிலைக்கு திரும்பாத திருவானைக்காவல் தேர்

62பார்த்தது
11 மணி நேரமாக நிலைக்கு திரும்பாத திருவானைக்காவல் தேர்
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.45 மணிக்கு பங்குனி தேரோட்டம் தொடங்கியது. தேருக்கு பின்னால் கட்டை போடும் சிலர், குறிப்பிட்ட சமுதாயத்தை குறிக்கும் வகையில் டி-ஷர்ட் அணிந்து வந்தனர். இந்த டி-ஷர்ட்டை உபயோகப்படுத்த கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரச்சனை கிளம்பியது. இதனால் தேர் பாதியிலேயே நின்றது. மதியம் கடும் வெயில் என்பதால் தேரை இழுக்க யாரும் முன் வரவில்லை. எனவே 11 மணி நேரத்திற்கு பின்னர் ஜம்புகேஸ்வரர் தேர் தற்போது நிலைக்கு வந்துள்ளது. பின்னால் வந்த அகிலாண்டேஸ்வரி அம்பாள் தேர் இன்னும் நிலைக்கு வராமல் இருக்கிறது.

தொடர்புடைய செய்தி