கர்நாடக மாநிலம் கே.ஆர் புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பாஜக தொண்டரான இவர், பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிடும் ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலேஜாவுக்கு ஆதரவாக இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அமைச்சர் ஷோபாவின் திறந்திருந்த கார் கதவில் இருசக்கர வாகனம் மோதி சாலையில் தடுமாறி விழுந்தார். அந்த சமயம் அந்த வழியாக வந்த பேருந்து அவர் மீது ஏறியது. இதனால் படுகாயமடைந்த பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.