முதியவரை தாக்கிய விவசாயிக்கு 2 ஆண்டு சிறை!

70பார்த்தது
முதியவரை தாக்கிய விவசாயிக்கு 2 ஆண்டு சிறை!
சாயர்புரம் அருகே முதியவரை தாக்கிய விவசாயிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசலை சேர்ந்தவர் கிருஷ்ணன் (91). இதே பகுதியை சேர்ந்தவர் அன்புசிங் (66). இருவரும் விவசாயிகள். நிலம் விற்பனை செய்தது தொடர்பாக இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது. கடந்த 29-3-2011 அன்று நட்டாத்தியில் உள்ள தனது தோட்டத்தில் கிருஷ்ணன் வேலையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அங்கு அத்துமீறி நுழைந்த அன்புசிங், முதியவர் கிருஷ்ணனை தாக்கி, அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் சாயர்புரம் போலீசார் வழக்குபதிவு செய்து அன்புசிங்கை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட அன்புசிங்குக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ. 5 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்தவழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முருகபெருமாள் ஆஜர் ஆனார்.

தொடர்புடைய செய்தி