காமராஜர் பிறந்தநாள் விழா; அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

85பார்த்தது
தூத்துக்குடியில் பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி வ. உ. சி மார்க்கெட் முன்புறம் அமைந்துள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என். சின்னதுரை,
மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம்,
மாவட்ட இளம் பெண் பாசறை பொருளாளர் புல்லட் பரிபூரண ராஜா, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பில்லா விக்னேஷ், மாவட்ட அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுனர் அணி செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலா ளர் சரவணபெருமாள், வக்கீல் முனியசாமி, தூத்துக்குடி பொற்கிழி ஜான்சன் தேவராஜ், மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வக்கீல் மந்திர மூர்த்தி, பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், முருகன், வட்ட செயலாளர் நவ்சாத், கேகேபி விஜயன், மகளிரணி ராஜேஸ்வரி, சகாயராஜ், யுவன் பாலா, சேம்ராஜ், உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

முன்னதாக மாலை அணிவிக்க வருகை தந்த மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கு பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் சால்வை அணிவித்து வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி