கால்வாய்களை அகலப்படுத்தும் பணி; மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு

74பார்த்தது
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் கோரம்பள்ளம் குளத்திலிருந்து வரும் மழை வெள்ளநீர் ஊருக்குள் பூகாத வண்ணம் உப்பாற்று ஓடை முகத்துவார பகுதிகளில் கால்வாய்களை அகலப்படுத்தும் பணியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் 10 வழித்தடங்களில் மழை வெள்ளநீர் கடலுக்கு முறையாக செல்ல வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் ஓடையை கடல் பகுதியில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான 52 53 56 வது வார்டு பகுதிகளில் கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெளியேற்றப்படும் மழை நீர் தேங்காத வகையில் ஓடைப்பகுதிகள் அகலப்படுத்தும் பணிக்காக ஆய்வு மேற்கொண்டோம் இந்த பகுதிகளில் தண்ணீர் உள்ளே செல்லாத அளவு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது மேலும் கடலில் எளிதாக மலை உள்ளநீர் கலக்கும் வகையில் முகத்துவாரப் பகுதி வரை 300 மீட்டர் முதல் 600 மீட்டர் வரை கடலுக்குள் செல்லும் வகையில் அகலப்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி