இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்!

587பார்த்தது
தருவைகுளம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 30 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையில் உதவி ஆய்வாளர் ஜீவமணி தர்மராஜ் தலைமை காவலர் ராமர் இருதயராஜ், இசக்கிமுத்து மற்றும் காவலர் பழனி பாலமுருகன் ஆகியோர் விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைக்குளம் கடற்கரைக்குச் செல்லும் உப்பளப்பாதையில் இன்று (31.05.2024) காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு நிறுத்தியிருந்த லோடு வேனை சோதனையிட்டபோது அதில் சுமார் 30 கிலோ எடை கொண்ட 62 மூட்டைகளில் சுமார் 2 டன் பீடி இலைகள் இருந்தது. மேலும் அதனை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் மதிப்பு ரூ. 30 லட்சம் ஆகும். இதனை இலங்கைக்கு கடத்த முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி