ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி!

75பார்த்தது
ரயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி!
மணியாச்சி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி கடம்பூர் ரயில் நிலையம் இடையே இன்று காலை 10: 30 மணியளவில் அவ்வழியாக சென்ற ஒரு ரயில் வண்டியில் இருந்து விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. அவரது முகம் சிதைந்து உள்ளது. இதுகுறித்து இளவேளங்கால் கிராம நிர்வாக அலுவலர் கன்னிவேல் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி