வாலிபர் பைக் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் பரபரப்பு

570பார்த்தது
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டையில் தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை வாலிபர் ஒருவர் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியில் வீட்டிற்கு வெளியே மற்றும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் நிறுத்தி செல்லும் இருசக்கர வாகனங்களை ஒரு கும்பல் திருடி செல்வது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி புதுக்கோட்டை சி. எஸ். ஐ தேவாலயம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு இருசக்கர வாகனத்தின் அருகே தள்ளாடியபடி வரும் ஒரு வாலிபர் அந்த வாகனத்தின் மீது சிறிது நேரம் அமர்ந்து அந்த வாகனத்தின் பூட்டை உடைத்து பின்னர் சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை இதைத்தொடர்ந்து இந்த திருட்டுச் சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி