நலத்திட்ட உதவிகள் வழங்கிய கனிமொழி எம்பி!

51பார்த்தது
தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற குழு தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புனரமைக்கப்பட்ட மக்கள் குறைதீற்கும் கூட்ட அரங்கை திறந்து வைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


திமுக நாடாளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு முதல் முறையாக தூத்துக்குடி வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூபாய் 50 லட்சம் செலவில் பல்வேறு வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட பொதுமக்களின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் கூட்ட அரங்கை திறந்து வைத்தார் முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் , மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி ஆகியோர் பங்கேற்றனர்

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நட்டார்

தொடர்புடைய செய்தி