பிஜேபியினர் போலீசாருடன் வாக்குவாதம் கைது!

79பார்த்தது
கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து டிவிடி சிக்னல் அருகில் அனுமதியின்றி பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் சுமார் 150க்கும் மேற்பட்டோர் கைது.


கள்ளக்குறிச்சி சம்பவத்தை கண்டித்து பாஜகவினர் இன்று மாநில முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தூத்துக்குடி பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் இருந்து பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி தராதால், தடையை மீறி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து பேரணியாக சென்றவர்கள் தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுட்டனர். அவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தி வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 150க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி